“தடவனுமா? இந்த பக்கம் வந்து தடவு வா..! “ - காண்டாகிய சீரியல் நடிகை ரிஹானா..!

 

சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியல் மூலம் மக்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த சின்னத்திரை நடிகை ரிஹானா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது என கூறலாம். 

இந்த நடிகை அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த பேட்டியில் பங்கேற்ற ரிஹானா தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அவர் பேருந்தில் செல்லும் போது ஒரு அசம்பாவிதம் நடந்ததாக தெரிவித்திருக்கிறார். 

அதுவும் இவர் ஆரம்ப காலங்களில் செவிலியராக பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த பேருந்தில் தான் வழக்கமாக செல்வார். அப்படி பேருந்தில் பயணம் செய்த போது ஒரு நபர் தன்னை வெகு நேரமாக தடவிக் கொண்டே இருந்திருக்கிறார். 

எனவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அவர் உனக்கு தடவ வேண்டுமா? எனக்கு எரிகிறது.. இந்த பக்கம் வந்து தடவி கொள் என்று கோபமாக பேசி இருக்கிறார். இதனை எல்லோரும் பார்த்ததோடு மட்டுமல்லாமல் கேட்டிருக்கிறார்கள். 

எனினும் அந்த நபரை தட்டிக் கேட்கவில்லை. உடனே நான் நடத்துனரை அழைத்து சம்பவத்தை கூறிய பிறகு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி அந்த நபரை இறக்கி விட்டார் எனக் கூறினார். 

இது போல வெளியில் சொல்ல முடியாத அனுபவங்கள் பல பெண்களுக்கு தினம், தினம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எந்த நிகழ்வுகளை நிறுத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மாறினால் மட்டுமே முடியும். 

எனவே எவ்வளவு சட்டங்கள் போட்டாலும் மனசாட்சி படி பெண்களை மதித்து நடக்கக்கூடிய ஆண்கள் வரும் வரை பெண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.