“ தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக சில்க் ஸ்மிதாவாக மாறிய வித்யா பாலன். !” - பலரும் பார்த்திடாத போட்டோ..!

 


80,90களில் முடி சூடா ராணியாக திகழ்ந்தவர் தான் நடிகை சில்க்ஸ் சுமிதா. திரை உலகில் இவர் தன்னுடைய அபார நடிப்பாலும், நடன திறமையாலும் பலரையும் சந்தோஷப்படுத்திய இவரது வாழ்க்கை மிகவும் சோகமயமானது. 

இந்நிலையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கக்கூடிய திரைப்படம் தான் தி டர்ட்டி பிச்சர். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடிக்க இருக்கிறார்.

மேலும் இவரோடு இம்ரான் ஹாஸ்மி, நசுருதீன்ஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படமானது ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளிவர உள்ளது. 

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வித்யா பாலன் அங்கு நடைபெற்ற பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதில் தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாபமாக நடிக்க ஆர்வத்தோடு இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தை என்னை நம்பி வழங்குவார்கள் என நான் நம்பவில்லை. எனவே அந்த கதாபாத்திரத்தை சிறப்பான முறையில் நடிக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு என்னிடம் பலரும் இது உங்கள் வாழ்க்கையை அழிக்கும் பைத்தியக்காரத்தனம் என்று கூறினார்கள். இன்னும் சில எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது அதனால் தான் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன் என கூறி இருக்கிறார்கள். 

 இதனை எல்லாம் நான் கருத்தில் கொள்ளாமல் இந்த படத்தில் நடிப்பதை குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் வித்தியாசமான முறையில் இந்த படம் இருக்கும் என்ற நம்பிக்கையில் எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த காத்திருக்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார்.