பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது தான் நடக்குது..! - கோபத்தில் கொந்தளித்த நடிகை ராதிகா..!

 

தமிழ் திரையுலகில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்த நடிகை ராதிகா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கக் கூடிய விகிதத்தில் நடிப்பினை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பன்முகத் திறமையை கொண்ட அற்புதக் கலைஞர். 

திரையுலகில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் அதிகளவு ரசிகர்களை கொண்ட நடிகை என்றால் மிகையாகாது. வெள்ளி திரையில் பல படங்களில் நடித்த இவர் சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே சீரியலை  கொண்டாடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். 

சன் டிவியில் தொடர்ந்து சீரியல்களை தயாரித்து நடித்து வந்த ராதிகா தற்போது விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரை தயாரித்து வருகிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சில கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

இந்த விஷயத்தை இவர் வேலூரில் இருக்கும் நாராயணி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் கலந்து கொண்ட போது பேசி இருக்கிறார்.

அவர் பிக் பாஸ் பற்றி பேசும் போது ஒருவரை ஒருவர் ந்த சோவில் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அது தான் இந்த சோவில் உள்ளது. வேறு என்ன இந்த சோவில் இருக்கிறது என்ற கேள்வியை வைத்திருக்கிறார். 

இந்தக் கேள்வியானது ஒவ்வொரு இளைஞர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதர்களையும் யோசிக்க வைக்க கூடிய ஒரு கேள்வியாக உள்ளது என கூறலாம். ஏனெனில் இன்று போதைப்பொருள் போல சீரியல்களும், இது போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கட்டுண்டு இருக்கும் இளைஞர்கள் அதிலிருந்து வெளிவர இது ஒரு மிகச் சிறந்த கேள்வியாக அமைந்தது உள்ளது. 

இதைத்தவிர இளம் பெண்கள் போன்களிலேயே மூழ்கி கிடக்காமல் இருக்க வேண்டும் என்பதை அன்பாக ராதிகா தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்தாவது இன்றைய இளைஞர்கள் செல்போன் மோகத்திலிருந்து வெளிவர இவரது பேச்சு ஒரு தூண்டுதலாக இருக்கும் என கூறலாம். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.