“அங்க.. இங்கனு.. Zoom பண்ணி..” - காருக்குள் கதறி அழுத பனிமலர் பன்னீர்செல்வம்..! - நடந்தது என்ன..?

 

வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஈடாக சின்னத்திரை நடிகைகளும் கொடி கட்டி பறந்து வரக்கூடிய வேளையில் சின்னத்திரையில் வேலை பார்க்கும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பனிமலர் பன்னீர்செல்வத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமான பனிமலர் பன்னீர்செல்வம் பல முக்கிய நிகழ்ச்சிகளை சின்னத்திரையில் தொகுத்து வழங்கியவர். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை மனம் விட்டு பகிர்ந்து இருக்கிறார். 

அதுவும் தற்போது திரை உலகில் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அதிக அளவு செய்திகள் பரவி வரும் காலத்தில் இவர் பகிர்ந்து இருக்கக்கூடிய விஷயமும் பெண்களுக்கு எதிரானது தான். அந்த வகையில் இவர் ஒரு முறை புடவை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

அப்படி புடவை விளம்பர வீடியோவில் இவர் நடித்திருந்த போது இவரது வயிற்று மற்றும் மார்பு பகுதிகளை ஜூம் செய்து மோசமாக எடிட் செய்து ட்விட்டரில் சில நபர்கள் பதிவேற்றி விட்டார்கள். 

எப்படி ராஷ்மிகா மந்தானாவின் வீடியோவை லிப்டுக்குள் வரும் போது டீப் பேக் செய்து மாற்றி இருந்தார்களோ, அது போலவே இவரது வீடியோவும் அங்க.. இங்கனு.. Zoom பண்ணி.. எடிட் செய்யப்பட்டது. இதனைப் பார்த்து இவரால் ஜீரணிக்க முடியாமல் இவருடைய நண்பர்களிடம் இதை பகிர்ந்து அழுது இருக்கிறார். 

நான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகளால் எனது மனது தடுமாறுவதோடு நானும் நிலை குலைந்து போய்விடுகிறேன். இதுவே சாதாரண பெண்ணுக்கு நிகழ்ந்திருந்தால் அந்தப் பெண் இந்த சம்பவத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது எளிதில் கூற முடியாது.

எனவே இது போன்ற சம்பவங்களை சட்டங்கள் போட்டு உறுதியாக தடுக்க வேண்டும். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள்.